Saturday 26 October 2013

                                              பூமி பரதேசிகளின் வீடு

பரதேசியாய் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. அது நதியில் நீராடுவதைப்போல இலகுவதானதாய் போலிருந்தாலும் ஆபத்தானதும் கூட.அதற்கு செல்வதற்கு புற உலகிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதே முதல் வழி. நட்சத்திரகூட்டத்திற்குள் இருக்கும் நிலவைப்போல ஒரே மனிதர்கள் மத்தியில் தனித்துவமாய் தெரிகிறார்கள் அவர்கள்.

பரதேசிகள் வேற்றுகிரகவாசிகள் அல்ல. இந்த உலக வாழ்க்கையிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டவர்கள் தான். புத்தர் போல மகாவீரர் போல அடையாளம் காணமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் பேசி நாம் கேட்பதில்லை,கேட்கவும் விருப்பமில்லை.அவர்களுக்கு இயங்கிகொண்டிருக்கும் இயந்திர உலகத்தின் நுட்பங்கள் பற்றி தெரியாது. Facebook, Block,Twitter,Media, பற்றியோ அரசியல் மாற்றங்கள் பற்றியோ எதுவுமே தெரியாது, தெரிந்துருப்பவர்கள் காவி சந்நியாசிகளாய் இருப்பார்கள்.

பரதேசிகள் இயற்கையின் குழந்தைகள். முதுமையிலிருந்து குழந்தமை திரும்பும் அவர்கள் மனநிலை அலாதியானது.மழையிலும் வெயிலிலும் குளிரிலும் பூமியின் மடியிலே கிடக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் மருத்துவமனையின் வாசலில் கால் கடுக்க நின்றதில்லை, ஏனெனில் உணவக விடுதியில் ஆர்டர் கொடுத்துவிட்டு வெகுநேரம் அமர்ந்திருப்பதில்லை.

பரதேசிகள் பூமியை இடம், வலம் ,அகலம், நீளம் என தெரியாமல் நடந்துகொண்டேயிருக்கிறார்கள். பறவைகள் வான அலைதலை போல இவர்கள் பூமி அலைதலை மேற்கொள்கிறார்கள்.

தொலைதூரம் செல்லும் பயணவாசியைப்போல முடிதலை நோக்கியே மனம் சதா எல்லோருக்கும் பயணித்துக்கொண்டிருக்கிறது. வெளி ரசிக்கும் குழந்தைகளை கூட நாம் அனுமதிப்பதில்லை. இயற்கை யாருக்காக இருக்கிறது ? இருக்கும் இடத்தில் இயற்கையை ரசிப்பவன் எல்லை தாண்டுவது எப்போது ? இயற்கையும் இளமையும் இழந்தபிறகு ரசிப்பதில் என்ன பயன் ?

பரதேசிகள் காற்றில் நடக்கிறார்கள். மழையை உடலில் அருந்துகிறார்கள், மரம் செடி கொடிகளிடம் அதன் காதுகளில் பேசுகிறார்கள்.



                                                                               =====   சுரேஷ்மான்யா======

3 comments:

  1. நல்ல தலைப்பு அருமையான பதிவு

    ReplyDelete
  2. அய்யா... நம் விழாவை முன்னிட்டாவது மீண்டும் உயர்த்தெழுங்கள்..
    தொடர்ந்து எழுத வேண்டுகிறோம்.

    ReplyDelete
  3. பிறதேசிகளுக்கு திறக்கப்பட்ட வெளிகளால்
    பரதேசிகளாகிப் போன சுதேசிகள்.

    ReplyDelete